கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பு தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 07 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 863 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் 836 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.