வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோல் குண்டுகள் இரண்டு, ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல், வாள் ஒன்று, துவிச்சக்கர வண்டி ஒன்று என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

குறித்த பகுதியால் இராணுவத்தினர் ரோந்து சென்ற போது மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்திய போதே குறித்த பொருட்களை மீட்டு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் இளைஞர் ஒருவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.