அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தினை சேதப்படுத்திய வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஒருவர் என கூறப்படுவதால் கண்ணாடிகள் சிலையின் கைப்பகுதி என்பன அடித்து உடைக்கப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.