வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண் வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பாத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பினை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.