முடிவில்லாமல் தொடரும் ‘கொரோனா; நேற்று 66 பேர்; இன்று இதுவரை 32 பேர் மொத்தப் பாதிப்பு 1,749; குணமடைவு 839

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்மைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,781 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 66 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கட்டாரிலிருந்து வந்த 19 பேர், பங்களாதேஷிலிருந்து வந்த 14 பேர், குவைத்திலிருந்து வந்த 02 பேர், கடற்படையைச் சேர்ந்த 31 பேர் அடங்குகின்றனர்.

இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் தற்போது 931 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  அத்துடன் இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 56 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.