கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கடற்படை சிப்பாய்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய இருவரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில், ரன்தம்பை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்திருந்தனர்.

இதன்படி,  நாட்டில் கொரோனோ தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பதோடு, இந்த தொற்றுக்கு இலக்காகி இதுவரையில்  11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.