கருணாவுக்கு ஆதரவாக கல்முனையில் விளம்பர பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான பதாதைகளை முக்கிய சந்திகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரங்கள் பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.