ஐ.தே.கவை அழித்தது சஜித் பிரேமதாஸவே! மஹிந்தவின் மகன் நாமல் போட்டுத் தாக்கு

“ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முழுப் பொறுப்புக்கூற வேண்டும். கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுப்படுத்த ஆளும் தரப்பினர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், ஐ.தே.க. தலைமைத்துவத்துக்கும் கட்சியின் கொள்கைக்கும் எதிராகச் செயற்பட்டார். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாகவே ஐ.தே.க பிளவுபட்டுள்ளது. இதற்கு இவர் மாத்திரமே முழுப் பொறுப்புக்கூற வேண்டும்.

பழமை வாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய நிலை கவலைக்குரியது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ போட்டியிட்டால் படுதோல்வியடைவார்  என்பதை அறிந்தே, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்குக் கட்சி மட்டத்தில் தீர்மானித்தார். .

அரசு பொருளாதார முன்னேற்றம் குறித்து அதிக அவதானம் செலுத்தியுள்ளது. பிற கட்சியின் உள்ளகப் பிரச்சினையில் தலையிட வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கிடையாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.