பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பினர்

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு நாடு திரும்மியுள்ளனர்.

அவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தொற்று நீக்கம் செய்யப்பட்ட அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.