வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தாம் வசித்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும் நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகளில் எவ்வித பயன்களும் இல்லை என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாடு திரும்பும் அனைவருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுதல் கட்டாயமானது என அவர் கூறியுள்ளார்.

விமான நிலையங்களில் காலையில் எடுக்கப்படும் மாதிரிகளுக்கான பி.சி.ஆர் அறிக்கை மாலை வேளைக்குள் விநியோகிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பி.சி.ஆர் அறிக்கை கிடைக்கும் வரை அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.