யாழில் வாள்வெட்டு குழு தாக்குதல் – 3 பேர் படுகாயம்

யாழ்.கொடிகாமம், வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெனிஸ்ரன், வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதென பொலிஸார் குறிப்பிட்ட போதிலும் தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.