தீவக மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

தீவக மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தினை தெரிவித்தார்.

மேலும் இந்திய நிதியுதவியுடன் ஆரோ பிளான்ட் திட்டத்தின் ஊடாக தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இதனையடுத்து, அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த கூட்டத்திற்கு அமைச்சரினால் அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.