கருணா அம்மானின் கட்சியில் இருந்து நானாகவே விலகினேன்- ஜெயானந்தமூர்த்தி

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியில் இருந்து நானாகவே விலகி, ஸ்ரீலங்கா பெரமுனை கட்சியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

தன்மீது கருணா அம்மான் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு தெரிவித்துவருவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக ஜெயானந்தமூர்த்தி மேலும் கூறியுள்ளதாவது, “கருணா அம்மான், நான் அவரது கட்சியில் இருந்து திருட்டுத்தனமாக வெளியேறிவுள்ளதாகவும் அவரது கட்சியின் பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதாகவும் உண்மைக்கு புறம்பாக குற்றம் சுமத்தி வருகின்றார்.

உண்மையில், நடக்க இருக்கும் நாடாளுமன்ற வேட்பாளர்களின் பங்கீட்டின் காரணமாகவே நான் அக்கட்சியில் இருந்து வெளியேறினேன். அதேவேளை அக்கட்சியின் பெயரை பயன்படுத்தி நான் எந்த பிரச்சாரமும் செய்யவில்லை. அதேவேளை என் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தி வருவது ஒரு பொருத்தமில்லாத அரசியல் நாகரிகமில்லாத செயல்

நான் ஒரு தேசிய கட்சியான ஸ்ரீலங்கா பெரமுனை கட்சியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்த தமிழர்கள் மாத்திரம் போட்டியிடுகின்றோம் என்பது  ஒரு வரலாறு. எனவே மக்கள் நன்கு உணர்ந்து நிதானமாக செயற்படவேண்டும்

உண்மையாக கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்லியல் என்ற பெயரில் அபகரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். அதேவேளை அவர்கள் அப்படி செய்யமாட்டர்கள் என நினைக்கின்றேன். அவ்வாறு நடந்தால் நாங்கள் ஜனாதிபதியுடன் பேசி அதற்கான தீர்வை பெறுவோம்” என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.