மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு ஒரு மாத சிறை

மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) முற்படுத்தப்பட்டனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் மூவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. மூவருக்கும் குற்றச்சாட்டுக்கள் வாசித்துக் காண்பிக்கப்பட்டன.

அத்துடன் குறித்த மூவரும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை மன்றில் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும்  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல்  உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.