சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்தும் புகையிரத சேவை ஆரம்பம்…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவை இன்று (08.06.2020) இடம்பெற்றது.

யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ஏற்றப்பட்டதுடன் புகையிரத நிலையத்தில் சமூக இடைவெளியும் பேணப்பட்டது.

வவுனியா புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர். மார்ச் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் புகையிரத சேவை வடக்கில் இன்றைய தினமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரு மாதங்களுக்கு மேலாக பாவணையற்று காணப்பட்ட ரயில்வே தண்டவாளங்களில் காணப்படும் புட்களை துப்பிரவு மேற்கொள்ளும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்ககூடியதாகவிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.