கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் கடற்படையைச் சேர்ந்த ஒருவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றிலிருந்து 1057 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 791 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்தோடு, 74 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொடிய வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.