தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது – சி.வி.கே.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பாா்க்கிறோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர், மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சிங்கள இனவாத குழுக்களே கிழக்கு மாகாண மரபுாிமை செயலணியில் உள்ளடங்கியிருக்கின்றனா். ஆகவே இந்த செயலணியின் நோக்கம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாகவே இருக்கும்.

மாகாணசபை இருந்த காலத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பொறுப்புள்ள உயா் பதவி தமிழா் ஒருவருக்கும் வழங்கப்படவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுடைய கோாிக்கை நிராகாிக்கப்பட்டது. ஆனால் வடக்கின் எல்லையில் தமிழ் மக்களின் நிலம் பறிக்கப்படுவது நிற்கவில்லை.

தமிழா்களின் நிலம், மொழி அச்சுறுத்தப்படுகின்றது. மறுபக்கம் தாம் பௌத்த சிங்கள அரசாங்கத்தை உருவாக்கியிருப்பதாக ஞானசார தேரா் போன்றவா்கள் கூறுகின்றனா். எனவே தோ்தல் முடிவின் பின்னா் தற்போதுள்ளதை விடவும் நிலைமைகள் மேலும் மோசமாகலாம்.

எனவே தமிழ் தரப்பு இந்த விடயத்தில் சா்வதேசத்தின் கவனத்தையும் ஈா்க்கும் வகையில் செயற்படுவது கட்டாயமாகும். மேலும் இன்றுள்ள சூழலில் தமிழ் பேசும் மக்கள் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதே பயனுள்ளதாக இருக்கும்.

தனித்தனியான பயணங்கள் ஆபத்தானவை. இது குறித்து முஸ்லிம் தலைவா்களும் தமிழ் தலைவா்களும் அதிகம் காிசனை காட்டவேண்டும்” என மேலும் கூறியுள்ளாா்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.