ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அனில் ஜாசிங்க

முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களின் போது சமூக இடைவெளி மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ளிட்ட அவசியமான நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போராட்டங்கள் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.