போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றதுடன் வவுனியா நகரில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.

வவுனியா பழைய பேரூந்து நிலையம், தபாலகம், வைத்தியசாலை, மக்கள் ஆகிவற்றின் முன்பாக சென்ற போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர் சிறுவர் உரிமை மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை முச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டினர்.

இதில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர், உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.