கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) 12 மணியுடன் நிறைவடையும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 56 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 1880 நோயாளிகளில் 617 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.