மட்டக்களப்பில் தமிழரசின் தேர்தல் முன்னாயத்தக் கூட்டம் இன்று…

எதிர்வரும் பாhளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் இன்றைய தினம் (13) கட்சிப் பணிமனையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரோஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், மாநகர முதல்வர், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்களான மா.உதயகுமார், இரா.சாணக்கியன் உட்பட கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வேட்பாளர்களின் செயற்திட்டங்கள், கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.