பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 129 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் கராய்ச்சி ஆகிய நகரங்களில் சிக்கித் தவித்த இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள 4 விருந்தகங்களில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.