கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு – டிபெண்டர் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபளின் உயிரிழப்பு தொடர்பான விபத்து குறித்து கைது செய்யப்பட்ட 24 வயது டிபெண்டர் வாகன சாரதி ஜூன் 19 வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குறித்த பொலிஸ் கான்ஸ்டபள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபள் பயணித்த மோட்டார்சைக்கிள், கடந்த வியாழக்கிழமை டிபெண்டர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்துடன் தொடர்புடைய 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.

இதனை அடுத்து புதுக்கடை இலக்கம் 7 நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.