வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கை

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ரயில் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த இருவர், நிலைய அதிபருடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, இவர்கள்  தகராறில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி ரயில் நிலைய அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அங்கிருந்து சென்றனர் என ரயில் நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக ரயில் நிலைய தலைமையகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன், தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை ரயில் சேவைகளை நிறுத்துவோம் என அதன்  உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொலிஸார்,  தகராறில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ததுடன் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் ரயில் நிலைய உத்தியோகத்தர்களுக்கு  உறுதியளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.