இலங்கையில் 1,901 பேர் கொரோனாவுக்கு இலக்கு! – 1,342 பேர் குணமடைவு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,901 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 55 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 547 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 11 பேர்  சிகிச்சைகளின்போது  உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 46 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.