புல்மோட்டை முருகன் ஆலயத்துக்கு குச்சவெளி தவிசாளரின் நீர் தாங்கி வழங்கிவைப்பு…

புல்மோட்டை முருகன் ஆலயத்தின் வருடாந்த கதிர்காம பாதயாத்திரைகளுக்கான அன்னதான பூஜை -2020 முன்னிட்டு அப் பகுதியின்  கோவில் நிருவாகிகள்  குச்சவெளி பிரதேச சபை த் தவிசாளர்  ஏ.முபாரக்கிடாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  ஞாயிற்றுக்கிழமை (14)தவிசாளர் ஆலய நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக நீர்தாங்கியை கையளித்தார்.
இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேசத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.முரளிதரன் தலைமை அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  ஏ.எஸ்.அலிப்தீன் மற்றும் ஏ.கஜேந்திரன், பிரதேச சபையின் ஊழியர்கள் கோவில் நிருவாகிகள் கலந்து கொண்டனர். மேலும் ஆலயத்திற்கு தேவையான உதவிகளையும் செய்து தருவதாகவும் தவிசாளர் தெரிவித்ததோடு,

 தவிசாளருக்கு ஆலய பரிபாலன சபையினர் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.