கொரோனாத் தொற்று 1,905 நேற்று 16 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 55 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 552 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 11 பேர்  சிகிச்சைகளின்போது  உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 46 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.