குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதன்படி இதுவரையில் 740 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக  இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 13 பேர் வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.