அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக   அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான   தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார்.]\

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் (செவ்வாய்க்கிழமை)  விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இன்றைய காலகட்டதில் தமிழர்கள் விழிப்பாக செயற்பட வேண்டும்.பல கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் எமது அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவம், தமிழர்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்க இல்லாதொழிக்க பல நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தமிழ் மக்களிடையே பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவை நியாய பூர்வமாக  இருந்தாலும் இவர்களின் சூழ்ச்சிகளை கண்டு நாம் தள்ளி நிற்க முடியாது அவ்வாறு போனால் பலமற்ற சமூகமாக மாறிவிடுவோம்.

அந்த அடிப்பலையில் எமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது இருப்பைகாப்பற்ற வேண்டும். இவ்வாறான சந்தர்பத்தை நழுவ விட கூடாது.

மேலும்  தமிழர்கள்  அரசியல் மாத்திரம்  பயணித்தவர்கள் அல்லர். இந்த பயணம் என்பது பல போராட்டங்களுக்கு மத்தியிலும் பல தியாகங்களுக்கு மத்தியிலும் உருவாக்கபப்டட்து இந்த கட்சியும் அதன் அரசியல் பயணமும் ஆகும்.

தமிழர்களின் இலட்சியம் இருப்பை பாதுகாக்க கட்சியின் பாலும் எமது மக்களின் பால் பற்றுறுதி கொண்டவர்களும் எமது மக்களுடன் சேர்ந்து  செயற்பட வேண்டும் . எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கபபட வேண்டும் என்பதற்காக தலைமை என்னை களமிறக்கியுள்ளது.

எமது மக்கள் நீண்ட ஒரு  யு த் த அழிவில் இருந்தவர்கள் அவர்களுக்கு பாரிய தேவைப்பாடுகள் இருக்கின்றது எனக்கு  நாடாளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தால் முன்பை விட பல மடங்கு வேகமாக செயற்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் முழு மூச்சாக செயற்படுவேன்.

இம்முறை தமிழ்த தேசியக் கூட்டமைப்பிற்கு ஏனைய கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் பாரிய சவாலாக அமையாது காரணம் எமது தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர்.எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது இவற்றை குறிவைத்து சில அரசியல் கட்சிகள் எமது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களே கடந்த நல்லாட்சிக்கு முன்னர் ஆட்சியை செய்தவர்கள் பல வாக்குறுதிகளை எமக்கு வழங்கி அந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை ஏன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட இவ்வாறான விடயங்கள் பல தீர்க்கப்படும் என பேசப்பட்டது இவ்வாறான விடயங்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். “ என தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.