கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25 பேர் மீண்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும் 25 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய இதுவரை, வைரஸ் தொற்றுக்குள்ளான 1947 பேரில் 1446 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடற்படையினர் 8 பேர் குணமடைந்ததாக கடற்படைப் பேச்சாளர் அறிவித்திருந்தார். இதன்படி, இதுவரை 756 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 490 பேர் தொடர்ந்து்ம சிகிச்சைபெற்று வருவதோடு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.