மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது…
(க.கிஷாந்தன்)
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை புகையிரத நிலையத்தை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் 20.06.2020 அன்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138வது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது.
குறித்த புகையிரதத்தின் காட்சிகாண் கூடம் பெட்டி தடம்புரண்டதன் காரணமாகவே மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், 21.06.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.
கருத்துக்களேதுமில்லை