பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியீடு

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியாகவுள்ளது.

குறித்த வர்த்தமானி நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.