கடன் அட்டை மோசடி: 3 நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது
சர்வதேச கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர்
இதன்போது, கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் வைத்தே, குறித்த சந்தேகநபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை