வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த இரு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1,951 பேரில் தற்போது 392நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 31 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கொடிய வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.