எந்தவோர் இனமும் கருணாவை ஏற்காது – விமல் திட்டவட்டம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த அமைப்பிலிருந்து விலகியிருக்கவும், பயங்கராவாதக் கொள்கைகளை கைவிட்டுச் செயற்படவும் அதிகாரம் உள்ளது.
ஜே.வி.பியின் பொதுச்செயலாளரான ரில்வின் சில்வா தனது தோள் மீது ஆயுதங்களைச் சுமந்து சென்றபோதே வாத்துவ ரயில் நிலையத்தில் வைத்து இராணுத்தினராக பிடிக்கப்பட்டார். அதனால் தற்போதும் ரில்வின் சில்வாவுக்கு அரசியல் செய்ய அதிகாரமில்லை எனக் கூறமுடியாது.
ஆனால், தாம் பயங்கரவாத அமைப்புகளில் இருந்த காலத்தில் செய்த வீரச் செயல்களை மீண்டும் பெருமையாகக் கூறிக்கொள்ள முயற்சிப்பது ஏற்புடையதைல்ல. கருணா அம்மான் தற்போதைய சந்தர்ப்பத்தில் நிகழ்த்தியுள்ள உரை மட்டமானது.
தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது எத்தனை இராணுவத்தினரைக் கொன்றார் என்பதைப் பெருமையாக கூறிக்கொள்ளும் கருணா அம்மானை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை