’உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ – நாவிதன்வெளியில் இரண்டு வீடுகள் கையளிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான “உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு பயனாளிகளுக்கு இரண்டு வீடுகளும் இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடுகளை  கையளிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில்  இடம்பெற்றது.

இவ் இரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.இவ்வீடுகள்   கையளிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில்  இடம்பெற்றது.

இவ் இரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு  இவ் வீடுகள்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.