நல்லுாரிலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் சுவரொட்டிகள்- மக்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டுமென பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை என்றபோதும் அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகள் அவை மற்றவர்களை கவரும்படி இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் வகையில் அமைய கூடாது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதியார் சிலை மீது வேட்பாளர் ஒருவர் தேர்தல் சுவரொட்டியை ஒட்டியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளது. முதலில் இவ்வாறான சுவரொட்டிகளே அகற்றப்படவேண்டுமென பொதுமக்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.