கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 2014 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 364 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.