மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷியில் இருந்து நாடுதிரும்பிய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்றுமட்டும் மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 2014 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 383 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.