கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கித் தவித்த மேலும் 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெலாரஸ் நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில், அவர்களை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்