தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை அவ்வாறு செல்ல மாட்டேன். அதைவிட சிறப்பான வெற்றி ஒன்றை பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.