கொஸ்கொடயில் விகாரதிபதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கொஸ்கொட– மஹயிந்துருவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாரதிபதி இறந்த நிலையில் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரரே (வயது 73) உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.