ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – கலையரசன்

எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை  இன்று சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ,”வடகிழக்கு பிரதேசங்களில் பல கட்சிகளை  சுயேட்சை குழுக்களை களமிறக்கி இருக்கிறார்கள் . இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அனைத்தயும் செய்தது போலவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம் என கூறியது போலவும் பல பொய்யான பிரச்சாரங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கிலே மிகவும் பலம் பொருந்திய தமிழர்களை எவ்வாறு சின்னாபின்னமாக்கலாம் என்று  அம்பாறை மாவட்டத்திலே பல போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மைச் சுற்றி திரிகின்றார்கள் எங்களை வசைபாடி இல்லாமல் செய்வதற்கு பல வழிகளைச் செய்கிறார்கள்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வைக்கும் விமர்சனங்களை நாங்கள் தாங்குபவர்களாகவும்  அதே போல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை  தீர்ப்பவர்களாகவும்  நாங்கள் தான் இருக்கின்றோம்.

அம்பாறை மாவட்டத்திலே பல பிரச்சினைகள் உள்ளது அவற்றைத் மாற்று கட்சிகள தீர்த்து கொடுத்தால் மௌனமாக இருந்திருப்போம் ஆனால் இந்தத் தடவை அல்ல இதற்கு முன்பும் கூட பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறி இருந்ததை அவர்கள் தமக்கு   சாதகமாக்கிக் கொண்டார்கள்.

கடந்த காலங்களில் செய்திகளில்  ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுகிறார்கள் என்ற எண்ணப் பாடுகளை தோற்றுவித்தார்கள். அவ்வாறு இந்த மக்களையும் பயன்படுத்தியது இந்த அரசு ஆனால் எதுவுமே செய்யவில்லை.

மக்களையும் எங்களையும் ஏமாற்றுகின்ற விடயத்தை  பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள் உண்மையிலே எங்கள் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பல பிரச்சினைகள் நடந்து இருக்கின்றது. தற்காலத்தில் அது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.

நாங்கள் எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில பிழையான வழியில் செல்லும் இளைஞர்களை பெரியோர்கள் அறிவுரைகளை கூறி நம்மை பாதுகாத்துக் கொள்ள கூடிய வழிமுறைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிழையான வழியில் செல்வதால் எதிர்காலத்தில் நிலையான தீர்வை பெறுமா என்ற கேள்விகளைக் கேளுங்கள்” என  தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.