2011 உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: வாக்குமூலம் வழங்கும் அரவிந்த!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள் குறித்து ஆராயும் குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

2011 உலகக்கிண்ண போட்டி இடம்பெற்றபோது தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவிற்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விளையாட்டில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராயும் குழுவில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஜூன் 18 அன்று முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜூன் 24 அன்று நவலப்பிட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் குறித்த குழு மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.