மட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று(புதன்கிழமை) ஆரம்பமானது.

சின்ன ஊறணி ஸ்ரீ மாவடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனியானது கொக்குவில் பிரதான வீதியின் ஊடாக அன்னை ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசினில் பால்குடங்களை சுமந்துவந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அலங்கார பூசைகள் இடம்பெற்றிருந்தது.

கிழக்கிலங்கையில் 6ஆடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் மூல விக்ரகம் அமையப்பெற்ற முதல் ஆலயம் எனும் சிறப்பினை பெற்றுள்ளது இவ் ஆலயம்.

நேற்று பால்குட பவனியுடன் ஆரம்பமான அன்னையின் சடங்குற்சவ பெருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை தீ மிதித்தல் மற்றும் பள்ளயத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.