கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,827ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 79 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஆறு கடற்படையினரும் உள்ளடங்குவதாக  கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் 848 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,054  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1827 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், 216 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்தோடு நாட்டில் இதுவரையில், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.