மஹிந்தவை பிரதமராக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சதி- வஜிர

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்குரிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர்  ராஜபக்ஷ அவர்களினது அரசியலைதான் தற்போது பின்பற்றுகின்றார்கள் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றதென அவர் குற்றம் சுமத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.