ராஜித, ரஞ்சித், ரஞ்சன் உட்பட ஏழு பேருக்கு அழைப்பாணை…

ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட கடந்த அரசின் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேல் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி. திஸாநாயக்கவால் குறித்த ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பொய்யான சாட்சிகளைத் தாக்கல் செய்து தனக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர் என்று தெரிவித்து டி.கே.பி. திஸாநாயக்கவால் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக கடந்த அரசின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவித்து இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.