நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 74 ஆகப் பதிவாகியுள்ள நிலையில் இன்னும் 160 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.