சிறீதரனிடம் பொலிஸார் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாள் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இன்றைய நிகழ்வுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.